கொள்ளையைத் தடுக்க முயன்றவருக்கு கத்திக்குத்து

நொய்டாவில் கொள்ளையைத் தடுக்க முயன்ற இனிப்பு கடை பணியாளரை கொள்ளையர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பினர். 

நொய்டாவில் கொள்ளையைத் தடுக்க முயன்ற இனிப்பு கடை பணியாளரை கொள்ளையர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பினர். 
இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் கூறியதாவது:
நொய்டா செக்டார் 18-இல் உள்ள மின் நிலையம் அருகில் புதன்கிழமை இரவு, அப்பகுதியில் இனிப்புகடையில் பணியாற்றும் அப்சல் என்பவர் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 3 பேர் அப்சலை தாக்கி, அவரிடம் இருந்த செல்லிடப்பேசி, பர்ஸ் ஆகியவற்றைப் பறித்தனர். இதைத் தடுக்க முயன்ற அப்சலை அந்தக் கும்பல் கத்தியால் தாக்கியுள்ளது. காயமடைந்த அப்சல் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார் என்று போலீஸார் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com