காவல்துறை குற்றப் பிரிவு அலுவலகம் அருகே தீ விபத்து

தில்லியின் சாணக்கியபுரியில் உள்ள காவல்துறை குற்ற தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு வெளியே திங்கள்கிழமை அதிகாலையில் சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டது.

தில்லியின் சாணக்கியபுரியில் உள்ள காவல்துறை குற்ற தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு வெளியே திங்கள்கிழமை அதிகாலையில் சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டது.
இதுதொடர்பாக தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சாணக்கியபுரியில் உள்ள தீன் மூர்த்தி காவல் வளாகத்தில், தில்லி காவல்துறையின் குற்ற தடுப்புப் பிரிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்கு வெளியே தரைப் பகுதியில் பதிக்கப்பட்டிருந்த மின்வயர்கள் திங்கள்கிழமை அதிகாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்தன.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும், 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்ற வீரர்கள், தீயை அணைத்தனர். இந்த விபத்தில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றார் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com