கிரிக்கெட் சூதாட்டம்: தில்லியில் 3 பேர் கைது

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் இடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தை மையமாக வைத்து

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் இடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தை மையமாக வைத்து இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தில்லியில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக குற்ற தடுப்புப் பிரிவு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
மத்திய தில்லியின் சிவில் லைன்ஸ் பகுதியிலுள்ள கட்டடம் ஒன்றில், கிரிக்கெட் சூதாட்டத்தில் சிலர் ஈடுபட்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த கட்டடத்தில் அதிரடி சோதனை மேற்கொண்ட குற்ற தடுப்பு பிரிவினர், ராஜேஷ் குமார், நிதின் அரோரா, நிதின் குரோவர் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 12 செல்லிடப்பேசிகள், 3 லேப்டாப்கள், 2 எல்சிடி டிவிக்கள், விடியோ பதிவு இயந்திரம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com