தோழி மீது அமிலம் வீசிவிட்டு போலீஸில் சரணடைந்த இளைஞர்

சக தோழி மீது அமிலம் வீசிவிட்டு காவல் நிலையத்தில் அவரது நண்பர் ஒருவர் சரணைடந்து உள்ளார்.

சக தோழி மீது அமிலம் வீசிவிட்டு காவல் நிலையத்தில் அவரது நண்பர் ஒருவர் சரணைடந்து உள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் கூறியதாவது:
தென்கிழக்கு தில்லி, சங்கம் விஹார் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்ற இளைஞர் தனது தோழி மீது அமிலம் வீசியதாக காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
வேறு ஒரு இளைஞருடன் தோழி பேசி வருவதாக சந்தேகமடைந்ததால் அவள் மீது கழிப்பறை சுத்தப்பட்டுத்த பயன்படுத்தப்படும் அமிலத்தை வீசினேன் என்று ரவிக்குமார் தெரிவித்தார்.
உடலில் காயங்களுடன் 20 வயதான அந்தப் பெண் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com