நொய்டாவில் கொள்ளை, கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டதாக 12 பேரை போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பாக போலீஸார் கூறியதாவது:
மதுபானம் கடத்தியதாக 2 பேரை நொய்டா பேஸ்-3 போலீஸார் கைது செய்து அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனமும், மதுபானங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பிஸ்ராக் பகுதி போலீஸார் ஜீத்து, பலேந்திரா, வினோத் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ. 29,500 ரொக்கமும், காணாமல்போன மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்தனர்.
போதைப் பொருள் கடத்தியதாக பப்லு என்பவரை கைது செய்த பாதல்பூர் போலீஸார் அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.