யமுனை சாலையில் கொள்ளை, கூட்டு பலாத்காரம்: 4 பேர் சிக்கினர்

யமுனை விரைவுச் சாலையில் காரில் சென்றவர்களிடம் துப்பாக்கிமுனையில் கொள்ளையடித்ததுடன், 4 பெண்களையும் கூட்டு பாலியல்

யமுனை விரைவுச் சாலையில் காரில் சென்றவர்களிடம் துப்பாக்கிமுனையில் கொள்ளையடித்ததுடன், 4 பெண்களையும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக 4 பேரை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக யமுனை விரைவுச் சாலை வழியாக உத்தரப் பிரதேச மாநிலம், புலந்த்ஷாருக்கு வியாழக்கிழமை ஒரு காரில் சென்று கொண்டிருந்தவர்களை, ஆயுதங்களுடன் வந்த கொள்ளை கும்பல் வழிமறித்தது. பின்னர், காரிலிருந்தவர்களை மிரட்டி பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த அக்கும்பல், காரிலிருந்த 4 பெண்களை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது. இதை தடுக்க முயன்ற ஒருவரை சுட்டுக் கொன்றுவிட்டு, அந்த கும்பல் தப்பியது. இதுதொடர்பாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் திலீப் சிங் கூறியதாவது: இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டனர். அவர்களின் மருத்துவ அறிக்கை கிடைக்கப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வருவதால் மருத்துவ அறிக்கையின் விவரங்கள் வெளியிடபட மாட்டாது.  மாவட்ட நீதிபதியின் முன் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று திலீப் சிங் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com