தேசியத் தலைநகர் வலயம், நொய்டாவில் உள்ள கிராமத்தில் கால்வாயில் மூழ்கி 8 வயது சிறுவன் உயிரிழந்தான்.
நொய்டா அருகே நயா குவான் கிராமத்தைச் சேர்ந்தவன் சங்கர் (8). இச்சிறுவன் திங்கள்கிழமை தனது கிராமத்திலிருந்து நொய்டா பேஸ் 2-இல் பிரதான சாலைக்கு சென்றான். அப்போது, அப்பகுதியில் உள்ள கால்வாயில் தவறி விழுந்தார். இத்தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியைத் தீவிரப்படுத்தினர். ஆனால், சிறுவனின் சடலத்தை மட்டுமே போலீஸாரால் மீட்க முடிந்தது. சிறுவனின் சடலம் பிரதேப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.