தெற்கு தில்லியில் ஒன்றரை வயது குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்த பக்கத்து வீட்டுக்காரர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து காவல் துறை அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியதாவது: இச்சம்பவம் தெற்கு தில்லியில் ஷபூர் ஜாட் பகுதியில் நிகழ்ந்துள்ளது. அக்குழந்தையின் வீட்டுக்கு பக்கத்துவீட்டுக்காரர் ஞாயிற்றுக்கிழமை மாலை வந்துள்ளார். அப்போது அக்குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் குழந்தையை அவர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.
குழந்தையின் அலறல் சப்தம் கேட்டு சிறுமியின் தாய் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு நடந்த மருத்துவப் பரிசோதனையில் சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக பக்கத்துவீட்டுக் காரர் கைது செய்யப்பட்டார் என்றார் அந்த அதிகாரி.