துப்பாக்கி முனையில் நடைபெற்ற கொள்ளை முயற்சி தோல்வி

ரோஹிணி அருகே துப்பாக்கி முனையில் வேனில் இருந்த பணத்தை கொள்ளையடிக்க நடைபெற்ற முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

ரோஹிணி அருகே துப்பாக்கி முனையில் வேனில் இருந்த பணத்தை கொள்ளையடிக்க நடைபெற்ற முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் கூறியதாவது:
ரோஹிணி, அலிபூரில் உள்ள மதுபான கடைகளில் பணத்தை வசூல் செய்வதற்காக வேன் நின்று கொண்டிருந்தது. செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணியளவில் அந்த வேன் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளனர்.
 பணத்தை எடுக்குமாறு வேனில் இருந்த சுபாஷ் மற்றும் ஓட்டுநரிடம்  கூறியுள்ளனர். அப்போது சுபாஷ் வேனில் இருந்து கீழே இறங்கியுள்ளார். சுபாஷ் மீது கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவரது தோல்பட்டையில் குண்டு பாய்ந்தது.
துப்பாக்சிச் சத்தம் கேட்டதும் அருகே இருந்த பொது மக்கள் ஒன்று கூடியுள்ளனர். இதைக் கண்ட கொள்ளையர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து ஓடியுள்ளனர். இந்தச் சம்பவம் முழுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் நடைபெறும்போது வேனில் சுமார் ரூ. 30 லட்சம் இருந்தது. இந்த கொள்ளைச் சம்பவத்தில் வேன் ஊழியர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம் என்று போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com