பள்ளி கழிப்பறையில் சிறுமி பலாத்காரம்: துப்புரவு பணியாளர் கைது

தெற்கு தில்லி, மாள்வியா நகரில் உள்ள தனியார் பள்ளியில் 6 வயது சிறுமியை பள்ளி கழிப்பறையில் பலாத்காரம் செய்ததாக துப்புரவு பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெற்கு தில்லி, மாள்வியா நகரில் உள்ள தனியார் பள்ளியில் 6 வயது சிறுமியை பள்ளி கழிப்பறையில் பலாத்காரம் செய்ததாக துப்புரவு பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு குருகிராமில் உள்ள தனியார் பள்ளியின் கழிப்பறையில் 2-ம் வகுப்பு மாணவர் பரத்யுமன் தாக்கூர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சையை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து ஷாதராவில் உள்ள அரசு பள்ளியில் சிறுமி பலாத்கார சம்பவம் நடைபெற்றது. இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, தில்லியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று தில்லி அரசும், தில்லி போலீஸும் உத்தரவிட்டது. அதன் பின்பும், தெற்கு தில்லியில் உள்ள தனியார் பள்ளியில் சிறுமி பலாத்கார சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக தில்லி போலீஸார் வியாழக்கிழமை கூறியதாவது: மாள்வியா நகரில் உள்ள தனியார் பள்ளியில் உள்ள கழிப்பறைக்கு 6-வது சிறுமி புதன்கிழமை சென்றுள்ளார். அங்கிருந்து அந்தச் சிறுமி உதவி கோரியுள்ளார். அப்போது, பெண் உதவியாளர் செல்வதற்கு பதிலாக ஆண் உதவியாளர் சென்று அந்தச் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டிற்கு திரும்பியதும் இந்தச் சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடமும், போலீஸாரிடமும் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்து, பள்ளியில் 22- வயதான துப்புரவுப் பணியாளர் கைது செய்யப்பட்டார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com