தில்லி சந்தையில் தீ விபத்து: ஒருவர் காயம்

மேற்கு தில்லியில் வெள்ளிக்கிழமை இரவு பிளாஸ்டிக் சந்தையில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் காயமடைந்தார்.

மேற்கு தில்லியில் வெள்ளிக்கிழமை இரவு பிளாஸ்டிக் சந்தையில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் காயமடைந்தார்.
இதுகுறித்து தீயணைப்புத் துறையினர் சனிக்கிழமை கூறியதாவது: மேற்கு தில்லி, டிக்ரி பகுதியில் பிளாஸ்டிக் சந்தை உள்ளது. இந்தச் சந்தையில் ஒரு பகுதியில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகளில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் தீ பிடித்ததாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்தில் தீயணைக்கும் பணியில் 22 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. சனிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்தார். தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்தில் ஏற்பட்ட சேத மதிப்பு குறித்து ஆராயப்பட்டு வருகிறது என்றார் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com