ரூ.1 கோடி போதை பொருள்களுடன் ஒருவர் கைது

தில்லி விமான நிலையத்தில் ரூ. 1 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள்களுடன் தான்சானியா நாட்டைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

தில்லி விமான நிலையத்தில் ரூ. 1 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள்களுடன் தான்சானியா நாட்டைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
மும்பையில் இருந்து தில்லிக்கு வந்த பிரேட்டன் என் லிமோ என்ற அந்த நபரை ரகசிய தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தில்லி விமான நிலையத்தில் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ. 1 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்தனர்.
எத்தியோப்பியாவில் இருந்து மும்பைக்கு லிமா செவ்வாய்க்கிழமை வந்துள்ளார். அவரது பெயரிடப்பட்ட பையில் 4.8 கிலோ ஹேராயினை மறைத்து கொண்டு வந்துள்ளார். பின்னர் மும்பையில் இருந்து தில்லிக்கு விமானம் மூலம் ஹேராயினைக் கொண்டு வந்தபோது, ரகசிய தகவலின் பேரில் லிமா கைது செய்யப்பட்டார். தான்சானியாவில் ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்தவர் லிமாவிடம் இந்த போதைப் பொருளைக் கொடுத்ததாகவும், அதை தில்லியில் உள்ள நைஜீரியரிடம் ஒப்படைக்க லிமா தில்லிக்கு வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த ஜனவரி மாதமும் லிமா இதேபோல் இந்தியா வந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com