15 வயது சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம் காதலனை தேடுகிறது போலீஸ்

தில்லியில் 15 வயது சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் 15 வயது சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புள்ளதாகக் கூறப்படும் சிறுமியின் காதலனை போலீஸார் தேடி வருகின்றனர். மேலும். சந்தேகத்தின் பேரில் காதலனின் நண்பர்கள் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வட கிழக்கு காவல் சரக துணை ஆணையர் அஜித் குமார் சிங்க்லா வெள்ளிக்கிழமை கூறியதாவது:
பள்ளி ஒன்றில் படித்து வரும் அச்சிறுமியும் 21 வயது இளைஞரும் கடந்த 6 மாதங்களாக நட்புடன் பழகி வந்துள்ளனர். வகுப்பு முடிந்த பிறகு அச்சிறுமியை அந்த இளைஞர் அடிக்கடி சந்தித்துள்ளார். இதில் இருவரும் நன்கு பழக்கமாகினர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலையில் வடகிழக்கு தில்லி, ஜோதி நகரில் உள்ள ஒரு குடியிருப்புக்கு வரும்படி அச்சிறுமியை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி, அச்சிறுமி அங்கு சென்றார். அங்கு ஏற்கெனவே இருவர் அக்குடியிருப்பில் இருந்துள்ளனர். 
இதைத் தொடர்ந்து, மூவரும் சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டி விட்டு மூவரும் தப்பிச் சென்றனர்.
பின்னர் வீட்டுக்கு வந்த அச்சிறுமி நடந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து போலீஸில் புதன்கிழமை புகார் அளிக்கப்பட்டது. அச்சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அச்சிறுமி பாலியல் பலாத்காரத்துக்குள்ளாக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் தலைமறைவாகவுள்ள சிறுமியின் காதலனை போலீஸார் தேடி வருகின்றனர். அவரது கூட்டாளிகள் இருவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்து வருகிறோம் என்றார் அஜித் குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com