ஆற்றில் மூழ்கிய பெண்ணை மீட்ட துணை ராணுவப் படை வீரர்

முனக் ஆற்றில் மூழ்கிய பெண்ணை மத்திய துணை ராணுவப் படை (சிஆர்பிஎப்) வீரர் பத்திரமாக மீட்டார்.

முனக் ஆற்றில் மூழ்கிய பெண்ணை மத்திய துணை ராணுவப் படை (சிஆர்பிஎப்) வீரர் பத்திரமாக மீட்டார்.
இதுகுறித்து சிஆப்பிஎப் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பவானா பகுதியில் உள்ள சிஆர்பிஎப் 55-வது பட்டாலியனில் பிரமோத் குமார் சௌகான் காவலராக உள்ளார்.
சனிக்கிழமை பகல் 11 மணியளவில் பணியில் இருந்த அவர், முனக் ஆற்றில் ஒருவர் மூழ்கி தத்தளிப்பதைப் பார்த்துள்ளார். உடனடியாக சக வீரர்களுக்கு இந்தத் தகவலை தெரிவித்தபடி, ஆற்றில் குதித்து அந்த பெண்ணை காப்பாற்றினார். பின்னர் அந்தப் பெண்ணுக்கு முதலுதவி அளித்து அங்குள்ள மருத்துமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நரேலாவைச் சேர்ந்த அந்தப் பெண் லக்ஷ்மி, ஆற்றில் தவறுதலாக விழுந்து மூழ்கியுள்ளதாக கூறப்படுகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com