கிழக்கு தில்லி மாநகராட்சி மேயர் தேர்தலுக்கான தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:
கிழக்கு தில்லி மாநகராட்சி மேயர் தேர்தல் ஏப்ரல் 24- ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தவிர்க்க முடியாத சில காரணங்களால் இத் தேர்தல் ஏப்ரல் 27- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றனர்.