தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் கடத்த முயன்ற ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பயணி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.22 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக சுங்கத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆப்கானிஸ்தானின் காந்தகாரில் இருந்து தில்லி விமான நிலையத்துக்கு வந்த விமானத்திலிருந்து இறங்கிய ஒரு பயணியின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 26 வயது நபரான அவரிடம் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, 737 கிராம் எடையுள்ள 3 தங்க சங்கிலிகளை அவர் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. ரூ.22 லட்சம் மதிப்புள்ள அந்த தங்க சங்கிலிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரை கைது செய்தனர் என்று சுங்கத் துறை தெரிவித்துள்ளது.