தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து கோரும் விவகாரம் தொடர்பாக சந்திக்க நேரம் கேட்டு பிரதமருக்கு தில்லி தொழிலாளர் துறை அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான கோபால் ராய் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கோபால் ராய் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து கோரிக்கை பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தில்லிவாசிகள் 10 லட்சம் பேர்கள் கையெழுத்து அடங்கிய கடிதத்தை அளிக்க விரும்புகிறோம். ஆம் ஆத்மி கட்சி மூலம் தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டியது தில்லிவாசிகளின் உரிமையாக உள்ளது.
தில்லிவாசிகள் எழுதியுள்ள கோரிக்கை கடிதத்தை ஆம் ஆத்மி கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் வந்து அளிக்க விரும்புகிறேன். இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஆகஸ்ட் 17-ஆம் தேதி, காலை 11 மணிக்கு நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.