தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தைச் (டிடிஇஏ) சார்ந்த பூசா சாலைப் பள்ளியில், மாணவர்கள் கற்றலின்போது இறுக்கம் தளர்ந்து இலகுவான மன நிலையில் பாடம் கற்க வேண்டும் என்ற நோக்கில் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சிக்கு சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது.
ஸ்பிக் மெக்கே அமைப்பு மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் புல்லாங்குழல் மேதை செசாங் சுப்பிரமணியம் புல்லாங்குழல் வாசித்தார். என்.சி.பரத்வாஜ் மிருதங்கமும், கிரிதர் கடமும் வாசித்தனர்.
பள்ளியின் இணைச்செயலர் ராஜேந்திரன் கலைஞர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கெளரவித்தார். பள்ளி முதல்வர் (பொறுப்பு) சித்ரா ராதாகிருஷ்ணன், பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.