ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி பீடாதிபதி ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி தேவி வியாழக்கிழமை தலைநகர் தில்லிக்கு வருகை தரவுள்ளார்.
ஆண்டு தோறும் அகில இந்திய அளவிலான "பாரத் யாத்ரா' ஆன்மிகப் பயணத்தை ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி தேவி மேற்கொண்டு வருகிறார். இந்த ஆன்மிகப் பயணத்தை இந்த ஆண்டு தொடக்கத்தில் திருவனந்தபுரத்தில் ஆரம்பித்தார். இதன் ஒரு பகுதியாக வியாழன், வெள்ளி (மார்ச் 15, 16) ஆகிய இரண்டு நாள்கள் தில்லியில் தங்குகிறார்.
தில்லி வசந்த் குஞ்சில் அமைந்துள்ள மாதா அமிர்தானந்தமயி மடத்துக்கு அவர் வருகை தருகிறார். இந்த இரு தினங்களிலும் அவர் பக்தர்களைச் சந்தித்து அருளாசி வழங்குகிறார். இரு நாள்களிலும் காலை 10.30 மணி முதல் சத்சங்கம், தியானம், பஜனை ஆகிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.