இந்திய விமானப்படை தளபதியின் வீட்டில் பணியாளர் தற்கொலை

இந்திய விமானப்படைத் தளபதி பிஎஸ். தனோவாவின் தில்லி வீட்டில் பணியாளர் ஒருவர் தற்கொலை செய்து

இந்திய விமானப்படைத் தளபதி பிஎஸ். தனோவாவின் தில்லி வீட்டில் பணியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீஸார் வெள்ளிக்கிழமை  மேலும் கூறியதாவது: அக்பர் சாலையில் உள்ள தனோவாவின் வீட்டில் பணியாற்றி வந்த மனோஜ் குமார் (30) பணியாளர் குடியிருப்பில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் வியாழக்கிழமை மதியம் நடைபெற்றுள்ளது.
வீட்டின் கதவு நீண்ட நேரம் திறக்கப்பட்டாததால் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது மனோஜ் குமார் தூக்கில் தொங்கியபடி இருந்தார். ஒப்பந்த ஊழியரான மனோஜ் குமார், கோகல்புரியில் தங்கி வந்துள்ளார். சம்பவ இடத்தில் இருந்து தற்கொலைக்கான காரண கடிதம் ஏதும் கண்டெடுக்கப்படவில்லை. சொந்த காரணங்களுக்காக மனஉலைச்சலில் இருந்த அவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்' என்று போலீஸார் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com