துவாரகா வங்கியில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளை: காசாளர் சாவு

துவாரகாவில் உள்ள வங்கி ஒன்றில் வெள்ளிக்கிழமை திடீரென புகுந்த கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டு ரூ. 2 லட்சம்

துவாரகாவில் உள்ள வங்கி ஒன்றில் வெள்ளிக்கிழமை திடீரென புகுந்த கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டு ரூ. 2 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்து சென்றனர். இதில், காசாளர் உயிரிழந்தார். மூவருக்கு காயம் ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் கூறியதாவது:
கைரா கிராமத்தில் உள்ள கார்ப்ரேஷன் வங்கியில் கொள்ளை நடந்துள்ளதாக வெள்ளிக்கிழமை மாலை 3.45 மணிக்கு தொலைபேசியில் புகார் வந்தது. 
 அங்கு சென்று விசாரணை நடத்தியதில் 4 மர்ம நபர்கள் திடீரென வங்கிக்குள் நுழைந்து காசாளரை துப்பாக்கியால் சுட்டு ரூ. 2 லட்சம் கொள்ளையடித்துள்ளனர். தப்பிக்கும்போதும் அவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் மூவருக்கு காயம் ஏற்பட்டது. 
குண்டு காயமடைந்த வங்கி காசாளார் சந்தோஷ் குமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 
பணத்தைக் கொள்ளையடித்து கொண்டு 4 கொள்ளையர்களும் மோட்டார் சைக்கிளில் தப்பியுள்ளனர். அவர்களைப் பிடிக்கும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com