மோட்டார்சைக்கிள் மீது கார் மோதல்: 3 இளைஞர்கள் பலி

வடகிழக்கு தில்லியின் சோனியா விஹார் பகுதியில் மோட்டார்சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில், 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

வடகிழக்கு தில்லியின் சோனியா விஹார் பகுதியில் மோட்டார்சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில், 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக காவல்துறை துணை ஆணையர் (வடகிழக்கு) அதுல்குமார் தாக்குர் கூறியதாவது:
தினேஷ் குமார் (32), தேவ் நாராயண் (22), சோனு (27) ஆகிய அந்த இளைஞர்களும், தசரா விழாவில் பங்கேற்றுவிட்டு, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். 
சோனியா விஹார் பகுதியில் சென்றபோது, அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார், மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் 3 இளைஞர்களும் தூக்கிவீசப்பட்டனர். காரும் தாறுமாறாக ஓடி, ஒரு சுவரில் மோதி நின்றது. 3 இளைஞர்களும் ஹெல்மெட் அணியாததால் தலையில் பலத்த காயமடைந்தனர். அவர்கள், அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில் மூவரும் ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது. 
விபத்து ஏற்படுத்திய காரை, சத்யேந்தர் என்பவர் ஓட்டி வந்துள்ளார். சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிவிட்ட அவரை தேடி வருகிறோம் என்றார் அதுல்குமார் தாக்குர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com