பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற நாகர்கோவில் இந்துக் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தடகளப் போட்டிகள் மதுரையில் நடைபெற்றன.
இதில் நாகர்கோவில் தெ.தி.இந்துக் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு, 7 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். மாணவர் மோகன்ஜோஸ் 200, 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கமும், அன்பு மும்முறை தாண்டுதலில் தங்கமும், நீளம் தாண்டுதலில் வெள்ளியும், ஜெரோமியா 800 மீட்டர், 1500 மீட்டர் ஓட்டத்தில் தங்கமும், ஜெகன் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில வெண்கலமும், விஷாக்ராமன் 20 கி.மீ. நடைப் போட்டியில் தங்கமும், பெண்கள் பிரிவில் ஆன்சிஅக்ஜா ஈட்டி எறிதலில் தங்கமும் பெற்றனர்.
சிறப்பிடம் பெற்ற மாணவர்களை கல்லூரி ஆட்சிக் குழுத் தலைவர் ஆறுமுகம்பிள்ளை, முதல்வர் சிதம்பரதாணு, உடற்கல்வி இயக்குநர் ஜாக்சன் பால்துரை, பயிற்றுநர் சுரேஷ்பாபு உள்ளிட்டோர் பாராட்டினர்.