ஆற்றூரில் திருக்கல்யாண திருஏடு வாசிப்பு

ஆற்றூர் அய்யா வைகுண்டர் திருநிழல் தாங்கலில் திரு ஏடு வாசிப்புத் திருவிழாவையொட்டி திருக்கல்யாண திரு ஏடு வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆற்றூர் அய்யா வைகுண்டர் திருநிழல் தாங்கலில் திரு ஏடு வாசிப்புத் திருவிழாவையொட்டி திருக்கல்யாண திரு ஏடு வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிழல் தாங்கலில் திருஏடு வாசிப்புத் திருவிழா கடந்த 21 ஆம் தேதி தொடங்கியது. இதில் பிரபஞ்சத்தின் முக்காலங்களில் கடந்த 6 யுக வரலாறுகள் அடங்கியப் பகுதிகள் விழாவில் முதல் இரு நாள்களில் வாசிக்கப்பட்டு விளக்கவுரை நிகழ்த்தப்பட்டது. கலியுகத்தின் வைகுண்ட அவதாரத்திற்கு முந்தைய நிகழ்வுகளை உள்ளடக்கும் பகுதிகள் 3 ஆம் 4 ஆம் நாள்களிலும், வைகுண்டரின் அவதார நிகழ்வுகள் 5 ஆம் நாள் முதல் தொடங்கி வாசிக்கப்பட்டு உரை நிகழ்த்தப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக திருக்கல்யாண திரு ஏடு வாசிப்பு நடைபெற்றது. இதில் அய்யா நாராயணர் சப்த மாதர்களை மணமுடிக்கும் நிகழ்வுப் பகுதி வாசித்து உரைநிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற விழாவில் வீதி வலம் வருதல், சோபனம் கூறல் ஆகிய நிகழ்ச்சிகளும், பின்னர் பெரிய உகப்படிப்பும், அன்ன தர்மமும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com