திருந்திக்கரையில் மண்டபத்துக்கு அடிக்கல்

திருநந்திக்கரை முத்தாரம்மன் கோயிலில் மண்டப கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

திருநந்திக்கரை முத்தாரம்மன் கோயிலில் மண்டப கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
திருநந்திக்கரை பீடவிளை முத்தாரம்மன் கோயில் கொடை விழா சனிக்கிழமை தொடங்கியது. இவ்விழாவில் கோயில் வளாகத்தில் திருமணம் உள்ளிட்ட சடங்குகள் நடத்துவதற்கான மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆலய நிர்வாகக் குழுத் தலைவர் மகேஷன் தலைமை வகித்தார். பாலபிரஜாதிபதி அடிகளார், மலையாள திரைப்பட நடிகர் எம். ஆர். கோபகுமார் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.
நிகழ்ச்சியில் கோயில் தந்திரி கேவசன் நம்பூதிரி, அர்ச்சகர் லட்சுமணன் ஐயர், எழுத்தாளர் சந்திரசேகரன் நாயர், தொழில் அதிபர் கே. சுகுமாரன் நாயர், ஆலய நிர்வாகக்குழுச் செயலர் சதீசன், திருந்திகரை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கித் தலைவர் சுரேஷ் குமார் ஆகியோர் பங்கேற்றனர். ஆலய நிர்வாகக் குழு பொருளாளர் ஆர். சுந்தரேஷன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com