லீபுரம் ஸ்ரீமுத்தாரம்மன் கோயில் பூக்குழி கொடை விழா இன்று தொடக்கம்

கன்னியாகுமரியை அடுத்த லீபுரம் ஸ்ரீமுத்தாரம்மன் கோயில் பூக்குழி கொடை விழா ஞாயிற்றுக்கிழமை (ஏப்.30) தொடங்குகிறது.

கன்னியாகுமரியை அடுத்த லீபுரம் ஸ்ரீமுத்தாரம்மன் கோயில் பூக்குழி கொடை விழா ஞாயிற்றுக்கிழமை (ஏப்.30) தொடங்குகிறது.
இதையொட்டி பகல் 12 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு கலை நிகழ்ச்சிகள், இரவு 7.30 மணி முதல் விநாடி-வினா, பாடல் மற்றும் நடனப் போட்டிகள் நடைபெறும். இரவு 9.15 மணிக்கு பரிசுகள் வழங்கப்படும்.
இரண்டாம் நாள் விழாவான மே 1-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 9.30 மணிக்கு கடல் தீர்த்தம் எடுத்து வருதல், அதிகாலை 1 மணிக்கு அம்மனுக்கு அலங்கார பூஜை ஆகியன நடைபெறும்.
பூக்குழி: 3-ஆம் நாள் விழாவான மே 2-ஆம் தேதி பகல் 12 மணிக்கு சமபந்தி விருந்து, பிற்பகல் 12.15 மணிக்கு அம்மனுக்கு பூப்படைப்பு, உச்சிக் கொடைவிழா நடைபெறும். மாலை 6 மணிக்கு பூக்குழி அமைத்தல், இரவு 7.30 மணிக்கு சமபந்தி விருந்து, நள்ளிரவு 12 மணிக்கு அம்மனுக்கு அலங்கார பூஜை, அதிகாலை 1 மணிக்கு அம்மன் பூக்குழி இறங்குதல் ஆகியன நடைபெறும்.
4-ஆம் நாள் விழாவான மே 3-ஆம் தேதி காலை 9 மணிக்கு மஞ்சள் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை, பகல் 12 மணிக்கு சமபந்தி விருந்து, மாலை 5 மணிக்கு ஸ்ரீ சேர்வைக்கார சுவாமிக்கு அலங்கார பூஜை, இரவு 8 மணிக்கு சமபந்தி விருந்து, அதிகாலை 2 மணிக்கு ஸ்ரீ சுடலைமாட சுவாமிக்கு சிறப்பு பூஜை ஆகியன நடைபெறும். 5-ஆம் நாள் விழாவான மே 4-ஆம் தேதி காலை 7 மணிக்கு தீபாராதனை, தொடர்ந்து பிரசாதம் வழங்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com