நாகர்கோவிலில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் ராஜசுலோச்சனா தலைமையிலான போலீஸார், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே சனிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்தவரை நிறுத்தி போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அவரிடம் 2 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், அவர் நாகர்கோவில் செட்டித் தெருவைச் சேர்ந்த நடேசன் (48) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.