குழித்துறை அருகே சிம்னி விளக்கு சரிந்து தீப்பிடித்ததில் மூதாட்டி உயிரிழந்தார்.
குழித்துறை அருகேயுள்ள இடவிளாகம் பகுதியைச் சேர்ந்த லாரன்ஸ் மனைவி லைசா (70). பொதுப்பணித் துறையில் வேலை பார்த்து ஓய்வுபெற்ற லாரன்ஸ் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தம்பதிக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இடவிளாகம் பகுதியிலுள்ள வீட்டில் லைசா தனியாக வசித்து வந்தார். அவர், இரவில் தூங்கும்போது சிம்னி விளக்கு ஏற்றி வைப்பது வழக்கமாம். இந்நிலையில் சனிக்கிழமை இரவு மண்ணெண்ணெய் சிம்னி விளக்கு சரிந்து விழுந்ததில் அவரது உடையில் தீப்பிடித்து எரிந்து, அவர் உடல் கருகி இறந்தார். இதுகுறித்து களியக்காவிளை போலீஸார் வழக்குப் பதிந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.