நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் நூலகத் தந்தை டாக்டர் ஆர்.எஸ். ரங்கநாதன் பிறந்த நாள் மற்றும் நூலகர் தின விழா நடைபெற்றது.
மாவட்ட மைய நூலகர் மேரி வரவேற்றார். மாவட்ட நூலக அலுவலர் காளிதாஸ் நூலகத் தந்தை டாக்டர் ஆர்.எஸ்.ரங்கநாதனின் உருவப் படத்தை திறந்து வைத்து பேசினார். கே.என்.எஸ்.கே. அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் நாஞ்சில் வானம்பாடி, துணைத் தலைவர் சந்திரன், லாரன்ஸ்மேரி, தங்கதுமிலன், பிதலீஸ், தியாகி முத்துக்கருப்பன், வரலாற்று ஆய்வாளர் ஷாகுல் ஹமீது, கவிஞர் காப்பியத் தமிழன் ஆகியோர் பேசினர். நூலகர் ரபீக் முகமது நன்றி கூறினார்.