ஆரல்வாய்மொழியில் கோயில்களில் திருட்டு

ஆரல்வாய்மொழியில் இரண்டு கோயில்களில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம் நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

ஆரல்வாய்மொழியில் இரண்டு கோயில்களில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம் நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
நாகர்கோவில்- ஆரல்வாய்மொழி தேசிய நெடுஞ்சாலையில் தெற்கு பெருமாள்புரம் காமராஜர் சிலை அருகே உச்சினிமாகாளி அம்மன் கோயில் உள்ளது. இது போன்று ஆரல்வாய்மொழி எம்.ஜி.ஆர். சிலை அருகே வடக்கு பெருமாள்புரத்தில் மாரிமுத்தாரம்மன் கோயில் உள்ளது. இதில் மாரிமுத்தாரம்மன் கோயிலுக்கு காலையில் கோயில் ஊழியர்கள் கதவினை திறக்க சென்ற போது, அங்கு கதவு கதவு உடைக்கப்பட்டு கோயிலில் உள்ளே இருந்த உண்டியலை உடைத்து பணம் திருடு போயிருந்தது தெரியவந்துள்ளது. இதே போன்று உச்சி மாகாளி அம்மன் கோயிலில் வெளியே வைத்து இருந்த உண்டியலை உடைத்து பணம் திருடு போகியிருந்ததும் தெரியவந்துள்ளது. இது குறித்து தகவலின் பேரில் ஆரல்வாய்மொழி போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com