:மார்த்தாண்டம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்த முதியவர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
மார்த்தாண்டம் அருகேயுள்ள உண்ணாமலைக்கடை பகுதியில் சாலையோரம் கடந்த சில நாள்களுக்கு முன் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்த நிலையில் கிடந்தார். அவரை அப்பகுதியினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
இறந்தவர் யார், எந்த ஊர், அவர் மீது மோதிய வாகனம் குறித்த விவரம் தெரியவில்லை. இது குறித்து மார்த்தாண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.