கல்குளம் கூட்டுறவு கடன் சங்க பேரவைக் கூட்டம்

தக்கலையில் அமைந்துள்ள கல்குளம் கூட்டுறவு கடன் சங்க பேரவைக் கூட்டம் சங்க அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தக்கலையில் அமைந்துள்ள கல்குளம் கூட்டுறவு கடன் சங்க பேரவைக் கூட்டம் சங்க அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சங்கத் தலைவர் பி.டி.எஸ். மணி தலைமை வகித்தார். துணைத் தலைவர் பிரதாபகுமார் முன்னிலை வகித்தார். முன்னாள் செயலர் பரமேஸ்வரன்பிள்ளை,  உறுப்பினர்கள் துரைராஜ்,  நோபிள்ராஜ், வழக்குரைஞர் செல்வராஜன்,  டாக்டர் சுந்தர்,  காசாளர் சதீஸ்,  முன்னாள் காசாளர் விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
கூட்டத்தில் 2017-2018ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவு திட்டம் அங்கீகரிக்கப்பட்டது. 2014-2015,  2015-2016 ஆம் நிதியாண்டுகளில் கிடைத்த லாபத்தில், உறுப்பினர்களுக்கு ஈவுத் தொகை வழங்க தீர்மானிக்கப்பட்டது.  முன்னதாக  சங்க முன்னாள் இயக்குநர் எம்.பயஸ்,  சங்க இயக்குநர் கங்காவின் கணவர் சேகர் ஆகியோரது மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com