நாகர்கோவிலில் பி.டபிள்யூ.டி. சாலையில் கணேசபுரம் சந்திப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள "பார்த்தாஸ் டெக்ஸ்டைல்ஸ்' ஜவுளி நிறுவனத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி. எம்.சி. பாலன் நிறுவனத்தைத் திறந்துவைத்தார். வசந்தா பாலன், டாக்டர் ரேணுகா பிரசாத், அழகம்மாள் சுப்பையா, ஷியாமளா மோகன்ராஜ், கரூர் வைஸ்யா வங்கியின் மதுரை மண்டல துணை மேலாளர் ரவி ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.
பட்டுப் பிரிவை டாக்டர் பிரசாத் ஜெயசேகரன், குழந்தைகளுக்கான ஆடைகள் பிரிவை டாக்டர் ஷாபு ஜெயசேகரன், பெண்களுக்கான ஆடைகள் பிரிவை சுஜாதா ரஞ்சித், காட்டன் சேலை பிரிவை ரெங்கபாய் சதாசிவம் ஆகியோர் திறந்துவைத்தனர். முதல் விற்பனையை டாக்டர் சுமித்ரா ரகுவரன் தொடக்கிவைத்தார்.
இந்நிறுவனம் 4 மாடிகளுடன், குளிரூட்டப்பட்ட அமைப்பு, விசாலமான கார் பார்க்கிங் வசதியுடன் நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ளது.
ஜவுளி நிறுவனப் பங்குதாரர்கள் நாகராஜுலு, அர்ஜுனன், ராஜகிருஷ்ணன், விஸ்வநாதன், சுஜாதா விஸ்வநாதன், ஸ்ரீநாத், மீனாட்சி ஸ்ரீநாத், அதிக்ஸ், அர்ஹா, ஸ்ரீநாத், பணியாளர்கள் வரவேற்றனர்.
ஜவுளிக்கடை அதிபர்கள், வர்த்தக பிரமுகர்கள், ரோட்டரி, லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.