கருங்கல் அருகேயுள்ள மிடாலம் மீனவக் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
பெரியார் மருத்துவக் குழுமம் சார்பில் நடைபெற்ற இம்முகாமுக்கு, மருத்துவர் கௌதமன் தலைமை வகித்தார். திராவிடர் கழக மாவட்டச் செயலர் வெற்றிவேந்தன் முன்னிலை வகித்தார். முகாமில், மருத்துவர்கள் பிறைநுதல் செல்வி, புஷ்பா, ஆர்த்தி, சிவகுமார் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
இதில், முனைவர் சக்திவேல், ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணேஸ்வரி, மண்டலச் செயலர் தயாளன், பொதுக்குழு உறுப்பினர் கோபால், தனிஸ்லாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.