பேச்சிப்பாறை சமத்துவபுரத்தில் அரசு புறம்போக்கு பகுதியில் நின்றிருந்த அயனி மரங்களை ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கடத்திய கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
பேச்சிப்பாறை சமத்துவபுரம் பகுதியில் அரசு புறம்போக்கு பகுதியில் முதிர்ந்த அயனி மரங்கள் உள்பட ஏராளம் மரங்கள் நிற்கின்றன. தற்போது ஓக்கி புயல் நிவாரணப் பணிகளில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இங்கு நின்ற லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மூன்று மரங்களை அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் வெட்டியுள்ளது.
இதில் இரண்டு மரங்களை அக்கும்பல் கடத்தியுள்ளது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் நவநீத கிருஷ்ணன் பேச்சிப்பாறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து கும்பலை தேடி வருகின்றனர்.