ஒக்கி புயலில் சிக்கி கடலில் மாயமான மீனவர்களை மீட்க வலியுறுத்தி தூத்தூர் கடலோர மண்டல மீனவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து நித்திரவிளையில் செவ்வாய்க்கிழமை கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.
இந்த கடையடைப்பு போராட்டம் காரணமாக, இப்பகுதியில் முதல்வரின் பாதுகாப்பு பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட காவலர்கள் உள்பட பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.