21இல் மீனவர் குறைதீர் கூட்டம்

குமரி மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் நாள்  கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 21) நடைபெறுகிறது.

குமரி மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் நாள்  கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 21) நடைபெறுகிறது.
இது குறித்து,  மாவட்ட ஆட்சியர்  சஜ்ஜன்சிங் ரா. சவாண் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:   குமரி மாவட்ட மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஜூலை 21ஆம் தேதி பகல் 11   மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில்  நடைபெறும்.    எனவே மீன்வளத்துறை மற்றும் இதர அரசு துறைகளால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவர்களின் குறைகள், கோரிக்கைகள், தேவைகள் அடங்கிய மனுக்களை இக்கூட்டத்தில் வழங்கலாம். பிற அரசுத்துறைகள் சார்ந்த கோரிக்கைகளை ஒரே மனுவில் கொடுக்காமல் துறைவாரியாக தனித்தனி மனுக்களாக வழங்கவேண்டும்.
21ஆம் தேதி  பெறப்படும் மனுக்களை சம்பந்தப்பட்ட பிற அரசுத் துறை அலுவலர்களுக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொண்டு, அதன் விவரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அடுத்த மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும். கோரிக்கை மனுக்கள் கொடுக்கும் மீனவர்கள் மற்றும் மீனவப் பிரதிநிதிகள்  கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com