மார்த்தாண்டம் அருகே தீ விபத்தில் 3 செங்கல் சூளை சேதம்

மார்த்தாண்டம் அருகே தீ விபத்தில் 3 செங்கல் சூளைகள் முற்றிலும் எரிந்து நாசமானது.

மார்த்தாண்டம் அருகே தீ விபத்தில் 3 செங்கல் சூளைகள் முற்றிலும் எரிந்து நாசமானது.
கொடுங்குளம் பகுதியில் டென்னிஸ் என்பவர் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவரது செங்கல் சூளையில் தயார் செய்த செங்கற்களை வேக வைப்பதற்காக அங்குள்ள கொட்டகையில் அடுக்கப்பட்டு விறகுகள் மூலம் தீயிட்டு செங்கற்கள் எரியூட்டும் பணி திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது வீசிய பலத்த காற்றில் செங்கல் சூளையின் மேற்கூரையில் தீ பரவியது. தொடர்ந்து பலத்த காற்று வீசியதையடுத்து, தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து அருகில் உள்ள செல்லசுவாமி, சிபி ஆகியோரது செங்கல் சூளைகளிலும் தீ பரவியது. இந்த தீ விபத்தில் 3 செங்கல் சூளைகளிலும் இருந்த விறகுகள் மற்றும் செங்கல் சூளையின் கொட்டகை உள்ளிட்டவை முற்றிலும் எரிந்து சாம்பலானது.
தகவல் அறிந்து வந்த குழித்துறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.  இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com