வலம்புரிவிளை குப்பைக் கிடங்கை மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பைக் கிடங்கை மாற்ற வலியுறுத்தி  அன்பர் கழகம் சார்பில் திங்கள்கிழமை பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பைக் கிடங்கை மாற்ற வலியுறுத்தி  அன்பர் கழகம் சார்பில் திங்கள்கிழமை பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காந்திய மக்கள் இயக்கத் தலைவர் கதிரேசன் தலைமை வகித்தார்.  முன்னதாக  ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் நடைப்பயணமாக புறப்பட்டு, குப்பைக்கிடங்கு அமைந்துள்ள பகுதிக்கு வந்தனர்.
நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் கடந்த 33 ஆண்டுகளாக அமைந்துள்ள இந்தக் குப்பைக்கிடங்கினால் தொற்று நோய் பரவி வருகிறது. இதனை உடனே அப்புறப்படுத்தவேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதில், அன்பர் கழக அமைப்பாளர் அமலதாஸ்,  குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்குரைஞர் ராதாகிருஷ்ணன் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com