ஆரல்வாய்மொழி காமராஜர் அறக்கட்டளை சார்பில் ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர், தோவாளை பகுதி மாணவ, மாணவியருக்காக 3 நாள்கள் போட்டித் தேர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதில், திங்கள்கிழமை நடைபெற்ற 3ஆம் நாள் முகாம் நிகழ்ச்சிக்கு காமராஜர் அறக்கட்டளைத் தலைவர் ராஜதிருமணி தலைமை வகித்தார். கௌரவத் தலைவர் ராமசாமி நாடார், செயலர் நவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொருளாளர் நாகராஜன் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆல்பி, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வேலைவாய்ப்பு, போட்டித் தேர்வுகள் குறித்து விளக்கினார்.
மேலும், முகாமில் கலந்துகொண்டவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. முகாமில், ஓய்வுபெற்ற உதவி ஆட்சியர் துரை சுவாமி, முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் நாகராஜன், ஓய்வு பெற்ற பேராசிரியர் தங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். காமராஜர் அறக்கட்டளை முன்னாள் செயலர் சண்முகவேல் நன்றி கூறினார்.