சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞர் கைது

குமரி மாவட்டம்,கடையாலுமூடு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

குமரி மாவட்டம்,கடையாலுமூடு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
 கடையாலுமூடு போங்காலை பகுதியைச் சேர்ந்தவர் அனில்குமார்  (27). ரப்பர் தோட்ட பால் வடிப்பு தொழிலாளி.  இவர், கடையாலுமூடு அருகேயுள்ள  மோதிரமலை மலையோர கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை அண்மையில் பாலியல் பலாத்காரம் செய்தாராம். மேலும் இது குறித்து வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டினாராம்.
இது குறித்து சிறுமியின் தரப்பில் குழித்துறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், காவல் ஆய்வாளர் நீலாவதி வழக்குப் பதிந்தார். தலைமறைவாக இருந்த  அனில்குமாரை மகளிர் போலீஸார் புதன்கிழமை கைது செய்து குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குழித்துறை கிளை சிறையில் அடைத்தனர். சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com