குமரி மாவட்டம், தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை(ஜூன் 30) நடைபெறுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மானிய விலையில் வழங்கும் சமையல் எரிவாயு விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்யும் விதமாகவும், சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்களை நேரில் தெரிவிப்பதற்காகவும் மாலை 5 மணிக்கு இந்த குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சோ.இளங்கோ தலைமையில் எண்ணெய் நிறுவனங்களின் மேலாளர்கள், எரிவாயு முகவர்கள் மற்றும் தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர் பங்கேற்கின்றனர்.
இக்கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.