நாகர்கோவில் கோணத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 30) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதில் குமரி மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்களுக்கான பணியாளர்களை தகுதி அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளனர். கலை 10 மணிக்கு தொடங்கும் முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம்.
இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் மற்றும் தனியார் நிறுவன பிரதிநிதிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து பயனடையலாம். தனியார் துறை வேலைக்கு தேர்வு செய்யப்பட்டாலும், அவர்களது வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்படமாட்டாது என குமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.