பிளஸ் 2 தேர்வில் ஆற்றூர் என்.வி.கே.எஸ். மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவியரும் வெற்றி பெற்றுள்ளனர். 46 சதவீத மாணவ, மாணவியர் 1000 க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். வணிகவியல் பாடத்தில் 6 பேர் நூறு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
மாணவி பி.பி. ஆதிரா (1160), எஸ். அஞ்சனா, வி.ஜி. காயத்ரி, மாணவர் வி.எஸ். அபிஜித் விஜய் (1152), மாணவி ஸ்வாதி வி. நம்பி (1140) மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளிச் செயலர் எஸ். கிருஷ்ணகுமார், முதல்வர் டி.எஸ். பிரஷோப் மாதவன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பாராட்டினர்.