பேச்சிப்பாறை அணையில் மூழ்கி முதியவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
பேச்சிப்பாறை அருகே கோலிஞ்சிமடம் பகுதியைச் சேர்ந்தவர் ராமன் காணி(65).
இவர் வெள்ளிக்கிழமை மாலையில் பேச்சிப்பாறை அணைப்பகுதியான மோதிரமலைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இவருடன் மீன் பிடிக்கச் சென்ற மற்றொரு நபர் பழங்குடி குடியிருப்பில் தகவல் தெரிவித்ததையடுத்து, குடியிருப்பு மக்கள் வந்து ராமன்காணியின் சடலத்தை மீட்டனர்.
இது குறித்து பேச்சிப்பாறை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.