குழந்தைகள் தினத்தையொட்டி, கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகமும் கொட்டாரம் கலை வாசல் அமைப்பும் இணைந்து மாவட்ட அளவில் நடத்திய வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், 25 பள்ளிகளிலிருந்து 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பிற்பகலில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாவட்ட நூலக அலுவலர் காளிதாஸ் பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினார்.
விழாவில், குழந்தை கவிஞர் சி.சிவலெட்சுமி, கலைவாசல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வை.கோபால், வடக்குத் தாமரைகுளம் அரசு உயர் நிலைப்பள்ளி தமிழாசிரியர் ஜூடி சுந்தர் பங்கேற்றனர்.