குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் உள்பட 2 பேர்  குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை  கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் உள்பட 2 பேர்  குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை  கைது செய்யப்பட்டனர்.
களியக்காவிளை அருகேயுள்ள திருத்துவபுரத்தைச் சேர்ந்த தேவராஜ் மனைவி லைலாகுமாரி(42). இவர் தொடர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தாராம். இது தொடர்பாக வடசேரி போலீஸார் இவரை கைது செய்து மதுரையில் பெண்கள் சிறப்பு சிறையில் அடைத்தனர். இதேபோல், களியக்காவிளையை அடுத்த  மீனக்கல் அருகேயுள்ள இருத்தாவூர் பகுதியைச் சேர்ந்த பிஜீ(32) தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்தாராம். இவரை ஆரல்வாய்மொழி  போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். இவ்விருவரையும்  குண்டர் சட்டத்தில் கைது செய்ய   மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை பரிந்துரை செய்ததன்பேரில், ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவின்படி,  2 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com