முன்னாள் பிரதமர் நேருவுக்கு ரூ. 5லட்சம் மதிப்பில் முழு உருவ வெண்கலச் சிலை நாகர்கோவிலில் அமைக்கப்படும் என்றார் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன்.
கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில், நேரு பிறந்த தின விழா, மாவட்ட அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
இவ்விழாவுக்கு தலைமை வகித்து, நேருவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ராதாகிருஷ்ணன் பேசியது: நேருவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் குமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலில் ரூ. 5 லட்சம் மதிப்பில் முழு உருவ வெண்கலச் சிலை விரைவில் நிறுவப்படும். மேலும், வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நூற்றாண்டு விழாவில் நலிந்தோருக்கு நல உதவிகள் வழங்கப்படும் என்றார் அவர்.
இந்நிகழ்ச்சியில், நாகர்கோவில் நகர காங்கிரஸ் தலைவர் மாகீன், வட்டாரத் தலைவர் முருகேசன், மகேஷ்லாசர், ஓ.பி.சி.துணைத் தலைவர் டாக்டர் அனிதா, மகளிர் காங்கிரஸ் மாவட்டத் தலைவி தங்கம்நடேசன், தாரகைகத்பட், கலை இலக்கிய பிரிவு பொறியாளர் அலெக்ஸ், வர்த்தக காங்கிரஸ் நிர்வாகி முருகேசன், ஏ.ஆர்.சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.