ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்குள்பட்ட குருசடியில், பேரூராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 8 லட்சம் செலவில் அலங்கார ஓடு பதிக்கும் பணி நடைபெற்றது.
இப்பணியை கன்னியாகுமரி எம்.எல்.ஏ. ஆஸ்டின் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில், தேவசகாயம் மவுண்டு பங்குத்தந்தை ஸ்டீபன், தோவாளை ஒன்றிய திமுக செயலர் நெடுஞ்செழியன், வார்டு முன்னாள் கவுன்சிலர் சதீஷ் குமார், ஜேக்கப் மனோகரன், டானியல், ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.