குமாரசுவாமி கோயிலில் கிரிவலம்

பௌர்ணமியை முன்னிட்டு குமாரகோவில் வேளிமலை அருள்மிகு குமாரசுவாமி கோயிலில் வியாழக்கிழமை கிரிவலம் நடைபெற்றது.

பௌர்ணமியை முன்னிட்டு குமாரகோவில் வேளிமலை அருள்மிகு குமாரசுவாமி கோயிலில் வியாழக்கிழமை கிரிவலம் நடைபெற்றது.
கிரிவலத்துக்கு வேல்முருகன் சேவா சங்கத் தலைவர் டாக்டர் சுகுமாரன் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் ராமகிருஷ்ணன்,  நாராயண மூர்த்தி,  கோபாலகிருஷ்ணன்,  மணி, அழகப்பாபிள்ளை,  மகாதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  
ஜீப்பின் முன்பகுதியில் குமார சுவாமியின் உருவப்படத்தை வைத்து,  சிறப்பு பூஜைக்கு பின்னர் கோயில் அமைந்துள்ள  மலையை சுற்றி வலம் வந்தனர். நிறைவாக தேரடி கோயில் வழியாக தெப்பக்குளத்திலுள்ள விநாயகர் சன்னதிக்கு வந்து பின்னர் கோயிலை அடைந்தனர். பின்னர் கோயிலில் சுவாமிக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com